Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரப்புடனான பேச்சுவார்த்தை - சிங்கப்பூர் வந்தடைந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங்

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (15:21 IST)
ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச சிங்கப்பூருக்கு வந்தடைந்தார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்.
அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இதன் பின்னர் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது போக்கை மாற்றிக்கொண்டு டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நேரில் சந்திக்க இருந்தனர். இந்த சந்திப்பின்போது தான் தென்கொரியர்களால் கொல்லப்படலாம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பியாங்யாங் நகரில் இருந்து  இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.  இந்த சந்திப்பு நடக்கவுள்ள செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments