Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கை சுனாமி உருவாக்கிய வடகொரியா! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (11:09 IST)
சமீப காலமாக ஏவுகணை சோதனை மூலம் பீதியை கிளப்பி வந்த வடகொரியா தற்போது வெற்றிகரமாக செயற்கை சுனாமியை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த பல காலமாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா அதிகப்படுத்தியுள்ளது. அவ்வாறாக சோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் சில தென்கொரியா, ஜப்பான் கடல் பகுதிகளில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் ஆயுதம் ஒன்றை ட்ரோன் மூலமாக செலுத்தி செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தி வெற்றிக் கண்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. கடலுக்கடியில் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அணு ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயற்கை சுனாமி சோதனை பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments