Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர வர ஓவரா போறீங்க.. பறக்கும் குப்பை பலூன்களை அனுப்பும் வடகொரியா! – தலைவலியில் தென்கொரியா!

Prasanth Karthick
திங்கள், 3 ஜூன் 2024 (11:26 IST)
வடகொரியா – தென் கொரியா இடையே நீண்ட காலமாகவே முட்டல் மோதல் இருந்து வரும் நிலையில் சமீபமாக வடகொரியா செய்த ஒரு செயல் தென்கொரியாவை கோபத்தின் உச்சத்திற்கே தள்ளியுள்ளது.

Garbage Balloons


உலக நாடுகளின் எச்சரிக்கையையும், அமெரிக்காவின் கண்டனத்தையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளை நடத்தி குடைச்சல் கொடுத்து வரும் நாடு வட கொரியா. இதனால் வடகொரியாவை மிரட்டுவதற்காக அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடுவதும், பதிலுக்கு வடகொரியா ஏதாவது ஏவுகணைகளை ஏவி தென்கொரிய கடல் பகுதியில் விழ செய்து அச்சுறுத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

ALSO READ: சோகத்தில் முடிந்த விமான சாகசம்.. வெடித்து சிதறிய விமானம்! – வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் தென்கொரியாவை தொல்லை செய்ய வடகொரியா புதிய ஐடியா ஒன்றை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி பறக்கும் ராட்சத பலூன்களில் பழைய ஷூ, ப்ளாஸ்டிக் குப்பைகள், மாட்டு சாணம் போன்றவற்றை நிரப்பி தென் கொரியா எல்லைக்குள் பறக்க விட்டு விடுகிறார்கள். அவை தென்கொரியாவிற்குள் பறந்து சென்று எங்காவது விழுந்து அசுத்தப்படுத்துகின்றன.

வடகொரியாவின் இந்த செயலால் தென்கொரியா தலைவலிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த பறக்கும் குப்பை பலூன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது வடகொரியா. குப்பைகளை சுத்தப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனியாவது தென்கொரியா உணர வேண்டும் என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவை உள்ளே அனுமதிப்பதைதான் வடகொரியா பூடகமாக கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments