Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இருந்தா சுட்டு தள்ளுங்க!? – பகீர் கிளப்பும் கிம் ஜாங் உன்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:02 IST)
வட கொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையான செய்திகளால் உலகம் முழுவதிலும் புகழ் பெற்றவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்த நிலையில் திடீரென பொது விழாக்களில் பங்கேற்று அதிர்ச்சி அளித்தவர். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியுள்ள நிலையில் வட கொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என தொடர்ந்து கூறி வருகிறது.

சீனாவுடன் மிக நெருக்கமான வர்த்தக தொடர்பில் உள்ள வட கொரியாவில் கொரோனா இல்லை என்பதை உலக நாடுகள் சந்தேக கண் கொண்டு கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் தென் கொரியா மூலமாக வட கொரியாவிற்குள் கொரோனா பரவியுள்ளதாக கூறப்படுகிறது. வட கொரியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சுட்டுக் கொல்லும்படி அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசு அறிவிப்பில் சீனா மற்றும் தென் கொரியா எல்லைகளில் ஆட்கள் தென்பட்டாலும், நாட்டிற்குள் கொரோனா தொற்று தென்பட்டாலும் அவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments