Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

Prasanth Karthick
ஞாயிறு, 9 மார்ச் 2025 (17:37 IST)

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத கப்பலை செய்து முடித்திருப்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

வடகொரியா நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் இருந்து வரும் நிலையில், அந்நாட்டின் சட்டத் திட்டங்களே அங்கு நடப்பவற்றை பிற நாடுகள் அறியாமுடியாத வகையில் இருந்து வருகிறது. மேலும் அண்டை நாடான தென்கொரியாவுடனும் தொடர்ந்து மோதலில் இருந்து வரும் வடகொரியா, அமெரிக்காவையும் சீண்டி வருகிறது.

 

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், கடலில் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருவதால், வடகொரியா மீது சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதை மீறியும் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை செய்து வருகிறது.

 

இந்நிலையில்தான் தற்போது வெற்றிகரமாக கட்டி முடித்துள்ள அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலின் முன்னர் நின்று அதிபர் கிம் ஜாங் உன் போஸ் கொடுக்கும் போட்டோவை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 7 ஆயிரம் டன் எடைக் கொண்டது என்றும், சுமார் 10 ஏவுகணைகளைம் சுமந்து செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது எனவும் கூறப்படுகிறது.

 

தென்கொரிய தீபகற்ப கடல் பகுதியின் ஆதிக்கம் தொடர்பாக வடகொரியா, தென்கொரியா இடையே தொடர் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த நீர்மூழ்கி கப்பலால் வடகொரியாவின் கடல் ஆதிக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏ திடீர் மறைவு.. இடைத்தேர்தல் எப்போது?

காலி இடத்தை தான் அமெரிக்கா தாக்கியுள்ளது. அணுசக்தி நிலையத்தை நாங்கள் மாற்றிவிட்டோம்: ஈரான்

"புதிய கீதை" வழியில் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் விஜய்.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழிசை..!

12 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய துரை வைகோ..!

மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments