30 நிமிடத்தில் ஒரே நேர மண்டலத்திற்கு வந்த கொரிய நாடுகள்!

Webdunia
சனி, 5 மே 2018 (14:55 IST)
வடகொரியா அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. வடகொரியா மீது ஐநா சபையும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்தன. 
 
அதன் பிறகு தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் இந்த போர் நிலையை மாற்றியது. அதன்பின் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று அதிபர் கிம்மை சந்தித்து பேசினர்.
 
அதன் பின்னர் சமீபத்தில் நடந்த உச்ச மாநாட்டில் இரு நாட்டு அதிபர்கலும் கலந்துக்கொண்டனர்.  இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. 
 
இந்நிலையில், தென் கொரியாவைவிட, அரை மணிநேரம் பின்னதாக தனது நேரத்தை வைத்து இருந்தது வடகொரியா. எனவே, நேற்று நள்ளிரவு வடகொரியா, 11.30க்கு தனது நேரத்தை அரை மணி நேரம் முன்னதாக மாற்றியது. 
 
ஒரே நாள் இரவில் நடந்த மாற்றத்தால் இருநாடுகளும் ஒரே நேர மண்டலத்திற்குள் வந்துள்ளன. இருநாடுகளிடையேயான உறவில் இது மேலும் ஒரு புதிய மாற்றமாக இந்த முயற்சி நடந்துள்ளது.
 
இந்த நெகிழ்வு தரும் நிகழ்வை உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments