Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (17:53 IST)
நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட கனடா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு  2015ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


 


 
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளருக்க, மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு நோபல் குழுவால் வழங்கப்பட்டு வருகிறது. 
 
கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
 
நியூட்ரினோ துகள்களுக்கு நிறை உண்டு என்று இரு விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். இதனால் இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என தேர்வுக் குழு கூறியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil