Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்பியலுக்கான நோபல் பரிசு.. 3 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:49 IST)
2023ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூவரும்  அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு  அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகியோர்கள் பெறுகின்றனர்.
 
இந்த மூவருக்கும் நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments