2015 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு இரண்டு கண்டுபிடிப்புகளாக, இரு பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
வில்லியம் சி.கேம்பல் மற்றும் சதோஷி ஆகியோர் உருளைப்புழு ஒட்டுண்ணிகளை முறியடிக்கும் புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்ததற்காகவும், யூயூ து என்பவருக்கு மலேரியா நோய்க்கான புதிய சிகிச்சையைக் கண்டுபிடித்ததற்காகவும் நோபல் பரிசுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வில்லியம் சி.கேம்பல் அயர்லாந்தையும். சதோஷி ஒமுரா ஜப்பானையும், யூயூ து சீனாவையும் சேர்ந்தவர்களாவர்.