Webdunia - Bharat's app for daily news and videos

Install App

51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (09:42 IST)
நியூஸிலாந்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் பயங்கரவாதி ஒருவன் புகுந்து அங்குள்ளவர்களை சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர். அதில் குற்றவாளியாக பிடிக்கப்பட்ட நபர் நேற்று விசாரணையில் சிரித்து கொண்டே பேசியது அங்குள்ளவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து நகரில் உள்ள கிரிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த தீவிர தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம்பட்டனர். இதுகுறித்து நியூஸிலாந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, பிரெண்டன் டாரண்ட் என்பவர்தான் இந்த தாக்குதலை நடத்தியவர் என்பது தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் தாக்குதல் நடத்தியதுடன் அந்த வீடியோவை ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார். இவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பிரெண்டன். அங்கு இறந்தவர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். கொலை பற்றி கேட்டதும் பிராண்டன் சிரித்தார். இது நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தியது. பிறகு சிரித்துக்கொண்டே நான் அதை செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதில் கடுப்பான நீதிபதி விசாரணையை அடுத்த வருடம் மே மாதம் ஒத்திவைத்தார். அதுவரை பிரேண்டன் சிறையில் இருக்கவும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments