மனித மூளையில் நியூராலிங்க் சிப்.. விரைவில் 2-வது நபருக்கு பொருத்தம்: எலான் மஸ்க்

Mahendran
வியாழன், 11 ஜூலை 2024 (12:40 IST)
மனித மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தும் முயற்சி கடந்த ஜனவரி மாதம் நடந்த நிலையில் தற்போது இரண்டாவது நபருக்கு இந்த சிப் பொருத்த இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜனவரி மாதம் சோதனை அடிப்படையில் மனித மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டது என்பதும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நபருக்கு பொருத்தப்பட்டு கணினி மூலம் அவரை இயக்கும் முயற்சி நடந்தது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுள்ளதாக கூறியுள்ள எலான் மஸ்க், விரைவில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
மூளையில் சீப் பொருத்தும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது என்றும் அனைத்தும் சரியாக நடந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒற்றை இலக்கத்தை தாண்டி நியூராலிங்க் சிப் பொருத்தம் பணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த சிப் பொருத்துவதன் மூலம் மூளைக்கும் கணினிக்கும் இடையிலான இணைப்பை கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கி அரிய சக்தி பெற முடியும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments