Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேபாளத்தில் தொடரும் போராட்டம்: பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு

நேபாளத்தில் தொடரும் போராட்டம்: பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:27 IST)
நேபாளத்தில் பிரதமர் பதவியில் இருந்து கே.பி.சர்மா விலக வலியுறுத்தி அவரது கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
நேபாள நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து  மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள கே.பி. சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவியை மாதேசி இன மக்கள் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil