Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈகை திருநாளை முன்னிட்டு மோடிக்கு இனிப்பு மாம்பழங்களை வழங்கிய நவாஷ் ஷெரீப்

ஈகை திருநாளை முன்னிட்டு மோடிக்கு இனிப்பு மாம்பழங்களை வழங்கிய நவாஷ் ஷெரீப்
, வியாழன், 23 ஜூலை 2015 (05:05 IST)
ஈகை திருநாளை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிப்பு மாம்பழங்களை பரிசாக கொடுத்துள்ளார்.
 

 
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு பெட்டி நிறைய மாம்பழங்களை பரிசாக அதிகாரிகள் மூலம் கொடுத்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை கொடுத்தனர். ஆனால், எல்லையில் நிலவும் பதட்டத்தை காரணமாக காட்டி, இனிப்புகளை வாங்க பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மறுத்துவிட்டனர்.
 
கடந்த ஆண்டும், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மாம்பழங்களை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil