Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதமாகிறார் நவாஸ் ஷெரீப் சகோதரர்!!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (20:19 IST)
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


 
 
பனாமாவில் உள்ள மோசக் பொன்சிகா என்ற பிரபலமான சட்ட நிறுவனம் 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டது. அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள் பலர் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த குழுவின் விசாரணையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள், மருமகன், சகோதரர் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். 
 
நவாஸ் ஷெரீப் மீதான குற்றங்கள் நிறுபனமானதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments