Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.சி.எஸ்., மிட்சுபிஷி கூட்டு முயற்சி - ஜப்பானில் புதிய கல்வி நிறுவனம்

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (19:39 IST)
டி.சி.எஸ் ஜப்பான் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தை 2014 செப்டம்பர் 2 அன்று பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் தொடங்கி வைத்தார். 


 
இந்நிறுவனத்தில் இருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு வருகை தரும் முதல் அணி மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் மிட்சுபிஷி கார்ப்பரேஷனின் கூட்டு முயற்சியே இந்தக் கல்வி நிறுவனம்.
 
இதனைத் தொடங்கி வைத்த பிரதமர், மாணவர்களிடம் பேசினார். அப்போது, இந்த 21ஆம் நூற்றாண்டு "அறிவு சார் நூற்றாண்டு" என்று கூறினார். டாக்ஸிலா மற்றும் நாலந்தா கல்வி நிறுவனங்கள் மூலம் கடந்த காலத்தில் உலகின் தலைமையாகவும் "அறிவு சார்" பாரம்பரியமாகவும் இந்தியா திகழ்ந்ததைப் பற்றி எடுத்துரைத்தார்.
 
இந்தியாவில் பயிற்சி முடித்து தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் மாணவர்கள், இனிய நினைவுகளுடன் இந்திய தூதர்களாகச் செல்வர் என்றார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments