Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவியை கற்பழித்துக் கொலை செய்து காட்டுக்குள் வீசிய மர்ம கும்பல்

பள்ளி மாணவியை கற்பழித்துக் கொலை செய்து காட்டுக்குள் வீசிய மர்ம கும்பல்
, வெள்ளி, 15 மே 2015 (20:48 IST)
இலங்கையில் பள்ளி மாணவியை மர்ம கும்பல் ஒன்று கற்பழித்துக் கொலை செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
 
இலங்கையை அடுத்த புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவி சம்பவத்தன்று பள்ளி முடிந்து திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. மகள் மாலை மங்கியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர், நெடுந்தீவு காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
 

 
ஆனால் முறையிட சென்ற பெற்றோரிடம் காவல் துறையினர், 'காதலித்த பையனுடன் ஓடியிருப்பாள்" என நக்கலாக கூறி அனுப்பியுள்ளனர். மறுநாளாகியும் மகள் வராதநிலையில் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.
 
இந்த சமயத்தில், அவர்களது வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இடையிலான காட்டுபகுதியில் மாணவியின் கால் செருப்பை சிலர் கண்டுள்ளனர். விஷயம் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மரத்தில் மாணவியின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
 
அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டன. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
 
webdunia

 
இதன் மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது. மேலும், மாணவி கடத்தி வைத்திருக்கப்பட்டு சித்திரவதை அல்லது திட்டமிட்ட பலமணி நேர வல்லுறவு நிகழ்ந்திருக்கலாம் என கருதுகின்றனர்.
 
மாணவியின் உடலிலும் கொடூரமான சித்திரவதைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அவர் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக காமகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படும் வாலிபன் ஒருவனின் பக்கமும் காவல் துறையினரின் கவனம் திரும்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil