Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண்களை கொன்று சமைத்து சாப்பிட்ட தம்பதி

இளம்பெண்களை கொன்று சமைத்து சாப்பிட்ட தம்பதி
, வியாழன், 18 ஜூன் 2015 (18:25 IST)
இளம்பெண்களை கொன்று சமைத்து சாப்பிட்ட பிரேசில் தம்பதிக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஜார்ஜ் பெல்ட்ராவ் நீகுரோமாண்ட் (வயது 54).  இவரது மனைவி இசபெல் (வயது 54).  இந்த தம்பதிகளுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை என்பதால் ஜார்ஜ் 2 ஆவது திருமணம் செய்து கொண்டார்.இதனையடுத்து இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜார்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.  
 
ஆகினும் கடந்த சில வருடங்களாக ஜார்ஜுக்கு குழந்தை இல்லை. ஆகையால் வீட்டிற்கு முன் உள்ள சாலை வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களை தங்களது குழந்தையாக மாற்ற முயற்சி செய்துள்ளனர். இதற்கு ஈடு கொடுக்காத  அவர்கள் கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர்.
 
அந்த பெண்களை அவர்கள் சமையலறையில் வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதை போன்று அவர்கள் 3 பெண்களை கொன்று சமைத்து சாப்பிட்டனர். ஜார்ஜின் முதல் மனைவி இசபெல் மாமிசத்தை சந்தேகப்படாமல் கடைகளில் விற்று வந்துள்ளார். 3 ஆவது பெண்ணை கொன்ற பின் அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தியபோது காவல்துறையினரிடம் இந்த 3 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. ஜார்ஜ் கைது செய்யப்பட்டு 23 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil