Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலையில் முடிந்த கொண்டாட்டம்: பிரேசிலில் கொடுமை!!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (15:12 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முன்னாள் மனைவி உள்பட 11 பேரை சுட்டுக் கொன்றவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்.


 
 
பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ மாநிலத்தின் காம்பினாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் மது விருந்துடன் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 
 
அப்போது, அந்த வீட்டின் மதில்சுவரை தாண்டி உள்ளே குதித்த சிட்னி ராமிஸ் டி அராஜோ (49) என்பவர், கையில் துப்பாக்கியுடன் வீட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்தார்.
 
அங்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முன்னாள் மனைவி மற்றும் அவரது 8 வயது மகனை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றார். மேலும் புத்தாண்டு விருந்தில் பங்கேற்ற மேலும் 8 பேரை சுட்டுக் கொன்ற அந்நபர் இறுதியாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments