Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை வழக்குப் பதிவு!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (22:51 IST)
பாகிஸ்தான் நாட்டில், தடையை மீறி போராட்டம் நடத்தியதில் ஒரு தொண்டர் பலியானதால் இம்ரான்கான் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் பிரதமர் இம்ரானங்கான் தலைமையியான  தெக்ரீக் இ இன்சாப் கட்சியினர் லாகூரி ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால், போலீஸார் இந்த பேரணிக்கு தடை விதித்தனர். இந்தத் தடையை மீறி இம்ரான் கான் தன் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் இம்ரான் கான் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு வந்த போலீஸார் கூட்டத்தை கலைந்துபோகும்படி கூறியும் அவகள் போகாததால், போலீஸாருக்கும்- தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த மோதலில், அலிபிலால் என்ற தொண்டர் உயிரிழந்தார்.  மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் இம்ரான் கான் உள்ளிட்ட 400 பேர் மீது கொலைவழக்கு, வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments