Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய விமானம் தீப்பிடித்து விபத்து: 41 பேர் உடல்கருகி பலி!

Webdunia
திங்கள், 6 மே 2019 (06:38 IST)
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அவசரமாக தரையிரங்கிய விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்ததால் அந்த விமானத்தில் பயணம் செய்த 41 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

 
 
ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் நேற்று ஒரு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென இறங்க முயன்றது. ரன்வேயில் விமானம் இறங்கியபோது திடீரென தீப்பிடித்தது. உடனே அருகில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணணப்பு துறையினர் விமானத்தில் உள்ள தீயை அணைக்க முயன்றனர். ஆனால் விமானத்தின் எஞ்சினில் உடனடியாக தீ பரவியதால் விமானம் கொழுந்து விட்டு எரிந்ததது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 41 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த விமானத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட மொத்தம் 78 பயணிகளும், ஐந்து விமான ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் மூன்று பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் வெரோனிகா ஸ்கேவோர்ட்சோவா தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments