Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை: திணறும் அமெரிக்கா

Webdunia
புதன், 27 மே 2020 (07:45 IST)
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்துவந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை குறையாததால் அமெரிக்க அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் திணறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,549 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1027 பேர் பலியாகியுள்ளனர் என்ற செய்தி பிரேசில் நாட்டை கொரோனா எந்த அளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பது தெரிகிறது
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்  56,78,026 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் 17,25,275பேர் அமெரிக்கர்கள் என்பதும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்கர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 3,51,668 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 24,26,560 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments