Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாத குழந்தையை கொன்று புகைப்படத்தை பேஸ்புக்கில் அப்லோட் செய்த தாய்

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (15:16 IST)
அமெரிக்காவில் தாய் ஒருவர் அவரது 11 மாத ஆண் குழந்தையை கொலை செய்து, குழந்தையின் சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நியூயார்க்கை சேர்ந்த நிகோல் கெல்லி, அவரது 11 மாத ஆண் குழந்தையை கொலை செய்து, குழந்தையின் சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
குழந்தையின் சடலத்தின் புகைப்படத்திற்கு அருகே, எனது மகனை நான் இழந்துவிட்டேன். அவனை மீண்டும் என் வாழிவிற்குள் கொண்டுவர எதாவது வழி இருக்கவேண்டும் என தோன்றுகிறது. அவன் எனது மகன், நான் அவனை பாதுகாத்திருக்க வேண்டும். அவன் இறந்துவிட்டான் என்பது எனக்கு கவலையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினரிடம், என் மகன் எனக்கு வேண்டாம், அதனால் அவனை கொன்றேன் எனத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குழந்தையை கொன்ற குற்றத்திற்காக நிகோலிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

Show comments