Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் கர்ப்பிணியை அடித்து உதைத்த பொதுமக்கள்

சீனாவில் கர்ப்பிணியை அடித்து உதைத்த பொதுமக்கள்
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (10:13 IST)
சீனாவில்  தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த கர்ப்பிணி பெண்ணை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் நிங்போ பகுதியை சேர்ந்தவர் லு (28) கர்ப்பிணியான இவர்  தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 
இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி அங்குள்ள தைசூ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அவர் திருடியதாக தெரிகிறது. அப்போது பொதுமக்களிடம் லு சிக்கிக் கொண்டார்.
 
இதனைத் தொடர்ந்து அங்குள்ள மரத்தில் லு வை கட்டிவைத்த பொதுமக்கள் அவர் கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாகத் தாக்கினர்.
 
இதனால் நிலைகுலைந்த லு மயக்கமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளான லுவை மீட்டனர். அவருக்கு 8 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
திருடிய குற்றத்திற்காக கர்ப்பிணி பெண் தாக்கப்பட்டது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil