Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஸ் ஹோண்டுராஸ் மரியா ஜோஸ் ஆல்வராடோவும், அவரது சகோதரியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்

மிஸ் ஹோண்டுராஸ் மரியா ஜோஸ் ஆல்வராடோவும், அவரது சகோதரியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்
, வியாழன், 20 நவம்பர் 2014 (12:07 IST)
மத்திய அமெரிக்காவில் மிஸ் ஹோண்டுராஸாகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அழகி மரியா ஜோஸ் ஆல்வராடோவும், அவரது சகோதரியும், சகோதரியின் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
மிஸ் ஹோண்டுராஸ் மரியா ஜோஸ் ஆல்வராடோ, அவரது தங்கை சோபியா ஆகியோரை, தங்கையின் காதலரான அன்டோனியோ ரூய்ஸ் சுட்டுக் கொன்றுள்ளார்.
 
19 வயதான மரியா ஜோஸ் லண்டனில் உள்ள உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த வேளையில், அவரும், அவரது சகோதரியான 23 வயது சோபியாவும் கடந்த வியாழனன்று காணாமல் போயினர். 
 
காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, சோபியாவின் காதலரான அன்டோனியோ ரூய்சை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ரூய்ஸ் ஒப்புக் கொண்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:-
 
கடந்த வியாழனன்று ரூய்சின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக இரு சகோதரிகளும் வந்துள்ளனர். அப்போது நடைபெற்ற விருந்தில் சோபியா மற்றொரு நபருடன் நடனமாடிதைக் கண்டவுடன் கோபம் தலைக்கேறிய ரூய்ஸ் சோபியாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
 
இதைக் கண்டு பயந்துபோன மிஸ் ஹோண்டுராஸ் மரியா ஜோஸ் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
 
பின்னர் இருவரது உடலையும் அருகிலுள்ள சாண்டா பார்பரா ஆற்றங்கரையில் தனது நண்பர் வேலன்டின் மால்டொனாடோ உதவியுடன் புதைத்துள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
 
ரூய்சின் நண்பர் வேலன்டின் மால்டொனாடோவையும் கைது செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்று சகோதரிகள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு அவர்களது சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil