Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அகதிகளின் பரிதாப நிலை: ஆஸ்த்ரிய லாரியில் 70 உடலகள் கண்டெடுப்பு

அகதிகளின் பரிதாப நிலை: ஆஸ்த்ரிய லாரியில் 70 உடலகள் கண்டெடுப்பு
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (17:27 IST)
ஆஸ்த்ரியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் கைவிடப்பட்ட லாரி ஒன்றில் 70 க்கும் மேற்பட்ட உடல்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அகதிகளின் உடலாக இருக்கலாம் என  ஆஸ்த்ரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியன்னாவை நோக்கியுள்ள இந்த  சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அழுகிய நிலையில் உள்ள இந்த உடல்கள் பற்றி விசாரணை நடத்த காவல்  துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த  வாகனத்தில் உள்ள உடல்கள் இறந்து  ஒன்றரை அல்லது இரண்டு நாட்கள்  இருக்கும் என காவல்துறை கூறியுள்ளது.

வாகனம் ஹங்கேரியில் இருந்து  ஆஸ்திரியா நுழையும் போதே  பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே  அநேகமாக இறந்து விட்டார்கள் என  அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால்  அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது  தெளிவாக தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil