Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்து சென்ற வெளிநாட்டினர்; விபத்துக்குள்ளான ட்ரக்! – மெக்சிகோவில் சோகம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (12:01 IST)
மெக்சிகோவில் வெளிநாட்டினர் மறைந்து சென்ற ட்ரக் விபத்துக்கு உள்ளானதில் 49 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலிருந்து ஆண்டுதோறும் மக்கள் பலர் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்காவிற்குள் அகதிகளாக நுழைகின்றனர். அதுபோல மெக்சிகோவுக்கு தெற்கே உள்ள குவாதமாலா போன்ற குட்டி நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைய முயல்கின்றனர்.

இந்நிலையில் தெற்கு மெக்சிகோவில் சியாபாஸ் நகரை நோக்கி சென்ற ட்ரக் ஒன்று நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த ட்ரக்கிற்குள் அனுமதியின்றி மெக்சிகோவிற்குள் அகதியாக நுழைந்த 107 பேர் பயணித்துள்ளனர். ட்ரக் கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி பிழைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குவாதமாலாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments