எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு: இன்று தொடக்கம்..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (10:52 IST)
எம்பிபிஎஸ் மாற்றம் பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2023 - 24 ஆம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சமீபத்தில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்தது. பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைனிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 
 
இந்த நிலையில்  காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 10 மணி முதல் 28-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வுசெய்ய வேண்டும். 
 
ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 
 
ஆகஸ்ட் 31-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 
 
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments