Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு: இன்று தொடக்கம்..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (10:52 IST)
எம்பிபிஎஸ் மாற்றம் பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2023 - 24 ஆம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சமீபத்தில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்தது. பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைனிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 
 
இந்த நிலையில்  காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 10 மணி முதல் 28-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வுசெய்ய வேண்டும். 
 
ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 
 
ஆகஸ்ட் 31-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 
 
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments