Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்லப்பட்ட டால்பின்களுக்கு நீதி வேண்டும்; மொரிஷியஸில் வெடித்த போராட்டம்!

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (10:14 IST)
மொரிஷியஸில் கப்பல் மோதி டால்பின்கள் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொரிஷியஸ் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் வகாஷியோ என்ற எண்ணெய்க்கப்பல் பவளப்பாறைகளில் மோதியது. இதனால் கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியதுடன், அந்த பகுதியில் சுமார் 40 டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கின.

கப்பல் மோதிய விபத்தில் டால்பின் இறந்ததாக குற்றம்சாட்டிய மக்கள் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும், டால்பின்கள் உயிரிழந்த விவகாரத்தில் நீதி வேண்டுமென போராட்டம் செய்ய தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் 2 டால்பின்களை உடற்கூறாய்வு செய்த மொரிஷியஸ் அரசு அவைகள் உடலில் காயங்கள் இருந்தாலும், எண்ணெய் கசிவுகள் இல்லை என கூறியுள்ளனர்.

ஆனால் அதை ஒப்புக்கொள்ள மறுத்துள்ள மக்கள் மற்ற டால்பின்களின் உடல்களை கூராய்வு செய்யும்போது சமூக ஆர்வலர்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments