Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

Siva
வெள்ளி, 28 மார்ச் 2025 (16:57 IST)
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக தாய்லாந்து தலைநகரமான பாங்காக்கில் 30 மாடி கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. அதில் சிக்கியிருந்த 43 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று மதியம்  மியான்மர் நாட்டின் சாகெய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவில், 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து 12 நிமிடங்கள் கழித்து, சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் பல்வேறு இடங்களில் சாலைகள் உடைந்து பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் தகர்ந்து விழுந்துள்ளன. குறிப்பாக, டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நிலநடுக்கத்தால்  ரயில், மெட்ரோ போன்ற போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நகரின் வடக்குப் பகுதியில் அரசின் 30 மாடி அலுவலகக் கட்டடம் சில நொடிகளில் தரைமட்டமாகியது. அதில் சிக்கியிருந்த 43 பேரின் நிலைமையைப் பற்றிய தகவல் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. 
 
இந்த சூழ்நிலையில் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments