அடைகாத்து கோழி குஞ்சுகளை பொரிய வைத்த அதிசய நபர்...

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (15:54 IST)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 3 வாரங்களாக கோழி முட்டைகளை அடைகாத்து, கோழி முட்டைகளை பொரித்து, குஞ்சுகளைப் பொரித்து சாதனைப் படைத்துள்ளார்.


 

 
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஆப்ரஹாம் பாய்ன்செவல் என்பவர் தனது வித்தியாசமான நடவடிக்கைகளால் மக்களை கவர்ந்து வருபவர் ஆவார். அவர் சமீபத்தில் ஒரு புதிய செயலை சாதித்துக் காட்டியுள்ளார். 
 
அதாவது, கோழி முட்டைகளை கோழிகள் அடைகாத்து, குஞ்சு பொரிப்பது போல், தானும் அடைகாத்து கோழிக்குஞ்சுகளை பொரிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
 
அதன் படி, பாரிசிஸ் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் உள்ள கண்ணாடி  அறையில் மூன்று வாரங்களாக அமர்ந்திருந்து, மொத்தம் 9 முட்டைகளை அடைகாத்தார்.  அந்த 3 வாரங்களும், உடலில் வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே அவர் மேற்கொண்டார். 
 
இதன் விளையாவாக அந்த 9 முட்டைகளில் இருந்தும் குஞ்சு வெளியே வந்தது. தான் அடைகாத்து பொரிய வைத்த குஞ்சுகளை தனது பண்ணையிலேயே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால், இயற்கைக்கு மாறாக ஆப்ரகாம் செயல்பட்டு வருவதாக பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments