Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கத்தியால் தலையில் குத்திக் கொண்ட விமான பயணி : லண்டலில் பரபரப்பு

கத்தியால் தலையில் குத்திக் கொண்ட விமான பயணி : லண்டலில் பரபரப்பு
, வெள்ளி, 18 டிசம்பர் 2015 (13:45 IST)
லண்டன் விமான நிலையத்தில் ஒரு ஆண் பயனி தன்னைத் தனே கத்தியால் குத்திக் கொண்டார். இந்த செயல் விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
லண்டனில் உள்ள ஹூத்ரு விமான நிலையத்தில், பயணிகள் விமானத்திற்காக காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த பயணி ஒருவர், திடீரென கத்தியால் தன் தலையில் தன்னைத்தானே குத்திக் கொண்டார். இதைக் கண்டு அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடந்தனர். அதன் பின், அவரச சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அவர் லண்டனிலிருந்து அபர்தீன் நகருக்குச் செல்வதற்காக வந்தவர் என்று தெரிய வந்துள்ளது. பலத்த சோதனைகளை தாண்டி  அவர் கத்தியை எடுத்து வர வாய்ப்பில்லை. எனவே அவர் விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், அந்த கத்தியை வாங்கியிருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
 
அவர் யாரையும் தாக்க வில்லை. எனவே அவர் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று நம்புகிற லண்டன் போலீஸ்  சிகிச்சைக்கு பின் அவரிடம் விசாரணை நடத்த முடிவெடுத்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil