Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு கொடுக்காமல் சீண்டிய வாலிபரை வேட்டையாடிய கரடி (வீடியோ)

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:12 IST)
தாய்லாந்து நாட்டில் உணவு கொடுக்காமல் சீண்டிய வாலிபரை கரடி கொடூரமாக வேட்டையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


 

 
தாய்லாந்து நாட்டில் பெத்ச்புன் மாகாணத்தில் உள்ள கோயில் ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் கரடிக்கு அங்கு வருபவர்கள் உணவு கொடுப்பது வழக்கம். கரடி ஒரு கட்டிடத்தினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கோயிலுக்கு தனது நண்பர்களுடன் வந்த வாலிபர் ஒருவர் கயிற்றின் மூலம் உணவு கொடுக்க முயற்சித்துள்ளார்.
 
ஆனால் உணவை கொடுக்காமல் சற்று விளையாடி கரடியை சீண்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கரடி மதில் வழியாக அந்த வாலிபரை உள்ளே இழுத்துப் போட்டு வேட்டையாடியது. வெளியே நின்றவர்கள் அந்த வாலிபரை கரடியிடம் இருந்து காப்பாற்ற பல முயற்சிகளை செய்தனர். கரடி அந்த வாலிபரை கடித்து அது கூண்டிற்கு இழுந்து சென்றது. 
 
பின் கோயில் அதிகாரிகள் கரடியை கம்பால் அடித்து விரட்டி அந்த வாலிபரை காப்பாற்றினர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

நன்றி: DailyWorldNews

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments