Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடையா? மாலத்தீவு அதிபர் ஆலோசனை என தகவல்..!

Siva
திங்கள், 3 ஜூன் 2024 (13:17 IST)
மாலத்தீவு நாட்டிற்கு இஸ்ரேலியர்கள் நுழைய தடைவிதிக்க மாலத்தீவு அதிபர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் அதிக அளவில் மாலத்தீவு நாட்டிற்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன. 
 
காசாவில் நடக்கும் போர் காரணமாக இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவு மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் மாலத்தீவுக்கு வரும் இஸ்ரேலியர்களை தடுக்க விரைவில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாலஸ்தீனத்திற்கு மாலத்தீவு மூலம் உதவி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கும் மாலத்தீவு மக்கள் என்ற பெயரில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,  இஸ்ரேலிய மக்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments