Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும்: அதிபர் அதிரடி அறிவிப்பு..!

Siva
திங்கள், 15 ஜனவரி 2024 (06:15 IST)
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.
 
 மாலத்தீவு மற்றும் இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், 2018ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர்.  இந்த ஒப்பந்தம் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.  மாலத்தீவு அரசு ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதையடுத்து, மார்ச் 15ம் தேதிக்குள் அனைத்து இந்திய ராணுவ வீரர்களும் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.
 
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்ற மாலத்தீவு அரசின் முடிவு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் ஒரு பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments