Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபரை கொல்ல சதி செய்த துணை அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (20:01 IST)
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கய்யூமை கொல்ல சதி வேலையில் ஈடுபட்ட முன்னாள் துணை அதிபர் அஹமத் அடீப்-க்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


 
 
கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி டெல்லியில் இருந்து அதிவேக படகு மூலம் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கய்யூம் அவரது மனைவியுடன் டெல்லியில் இருந்து மாலத்தீவு திரும்பிக்கொண்டிருந்தார்.
 
அப்போது அவர் சென்ற படகு வெடித்து சிதறியது. இதில் அதிபர் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது மனைவி படுகாயமடைந்தார். இந்த படகு வெடித்தது குறித்தது குறித்த விசாரணையில் இது துணை அதிபர் அஹமத் அடீப்-ன் சதி என தெரியவந்தது.
 
இதனையடுத்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று அவருக்கு தீர்ப்பளித்தது. இதில் அவருக்கு சதி செயலில் ஈடுபட்டதுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் சேர்த்து மொத்தம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments