Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் சிறுமி மலாலா இந்தியா வந்தால் வரவேற்போம்: சிவசேனா

பாகிஸ்தான் சிறுமி மலாலா இந்தியா வந்தால் வரவேற்போம்: சிவசேனா
, வியாழன், 22 அக்டோபர் 2015 (03:41 IST)
இந்தியாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா வருகை தந்தால் அவரை மகிழ்ச்சியுடன் வரேவற்போம் என சிவேசனா கருத்து தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி இசை நிகழ்ச்சி, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா கட்சி, இந்தியாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா வருகை தந்தால் அவரை மகிழ்ச்சியுடன் வரேவற்போம் என சிவேசனா கருத்து தெரிவித்துள்ளது.
 
இது குறித்து, சிவசேனா கட்சி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 
 
பாகிஸ்தான் இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்றவர்களை இந்திய திருநாட்டிற்குள் வர அனுமதிக்க மாட்டோம். ஆனால், பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து, தீவிரவாத்திற்கு எதிராக போராடி வரும் சிறுமி மலாலா, இந்தியா வந்தால் அவரை மகிழ்ச்சியுடன்  வரவேற்போம். காரணம், எங்களது நோக்கமும், மாலாவின் நோக்கமுன் ஒன்றுதான் என்பதால் என கருத்து தெரிவித்துள்ளார்.  
 

Share this Story:

Follow Webdunia tamil