Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா எங்களை குறிவைக்கிறது.. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்..!

Mahendran
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (16:33 IST)
பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணம் மாலத்தீவுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் இந்தியா எங்களை குறிவைக்கிறது என்று மாலத்தீவு அதிபர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலிருந்து அதிக அளவு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கும் நிலையில் மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம் என்ற கருத்தை மறைமுகமாக வலியுறுத்துவதற்காக தான் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றதாக கூறப்பட்டது. இதனால் பலரும் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டு லட்சத்தீவு செல்வதாக புறப்படுகிறது.

இந்த நிலையில் மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது சமூகவலைதள பக்கத்தில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது, மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில், பலரும் மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments