Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலை..

Arun Prasath
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (17:27 IST)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார்.

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் வில்லினூவ் என்ற நகரில் உள்ள ஒரு பூங்காவில், மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைத்தார். அந்த இடத்திற்கு காந்தி சதுக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்பு அந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமைன் ரோலாண்டின் அழைப்பை ஏற்று 1931 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி வில்லினூவ் நகருக்கு வந்துள்ளார் என நினைவு கூர்ந்தார்.

இதனையடுத்து ஸ்லோவேனியா நாட்டுக்கு செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 17 ஆம் தேதி டெல்லி திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments