Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரையும், காதலனையும் கொன்று, ஐஸ்கிரீம் பார்லரில் புதைத்த பெண் கைது

கணவரையும், காதலனையும் கொன்று, ஐஸ்கிரீம் பார்லரில் புதைத்த பெண் கைது
, புதன், 19 நவம்பர் 2014 (13:11 IST)
ஆஸ்திரியா நாட்டில் கணவரையும், காதலரையும் கொலை செய்து ஐஸ்கிரீம் பார்லரில் புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கரன்ஸா என்ற பெண் ஐஸ்கீரிம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது கணவரரை 2008ஆம் ஆண்டு இவரது கணவர் விவாகரத்து பெற்ற பின்னும் வீட்டை விட்டு செல்ல மறுத்ததால், அவரை துப்பாகியால் சுட்டு கொன்றுள்ளதாகவும், காதலனை 2010ஆம் ஆண்டு அவரது  காதலன் குடித்து விட்டு வருவதாகக் கூறி அவரையும் சுட்டுக் கொலை செய்து தனது ஐஸ்கிரீம் பார்லரில் புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
பின்னர் உடல்களை தனது ஐஸ்கீரிம் பார்லரில் புதைத்துவிட்டு, மூன்றாவதாக நபர் ஒருவருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்.  அவரது ஐஸ்கிரீம் பார்லரில் பணிபுரிபவர், புதைக்கப்பட்ட உடல்களைப் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
இதனையடுத்து காவல் துறையினர் கரன்ஸாவை கைது செய்து விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கரன்ஸாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil