Webdunia - Bharat's app for daily news and videos

Install App

113 கோடி லிட்டர் ஆவியாவதை தடுத்த அமெரிக்கா! ரூ.10 லட்சத்தை வீணடித்த தமிழ்நாடு

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (22:15 IST)
சமீபத்தில் வைகை அணையில் இருக்கும் தண்ணீர் வீணாகாமல் தடுக்க தமிழக அமைச்சர் ஒருவர் தெர்மொகோல் போடும் திட்டம் சொதப்பியது அனைவரும் அறிவர். இதற்காக ரூ.10 லட்சம் செலவானதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதே தெர்மோகோலை வைத்து அமெரிக்கா சுமார் 113 கோடி லிட்டர் தண்ணீர் ஆவியாவதை தடுத்து நிறுத்தி சாதனை புரிந்துள்ளது.



 


அமெரிக்காவில் உள்ள  லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நீரிலையில் உள்ள தண்ணீர் வறண்டு விடாமல் பாதுகாக்கவும், பாசி மற்றும் கொசுக்களின் உற்பத்தியை தடுத்து நீரின் தூய்மையை பாதுகாக்கவும் அணையில் கருப்பு நிற தெர்மோ கூல் அட்டையால் தயாரிக்கப்பட்ட சுமார் பத்து கோடி பந்துகள் ஒரே நாளில் கொட்டப்பட்டன.

இந்த பந்துகள் அனைத்தும் அணையில் உள்ள நீரின் மேற்பரப்பில் பரவி, சூரியனில் இருந்து பாயும் வெப்பமான புற ஊதாக் கதிர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஆவியாவதை தடுத்தது. இதை பார்த்தாவது தமிழக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் திருந்துவார்களா?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments