Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் - ரஷ்யா எச்சரிக்கை

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (15:30 IST)
உக்ரைன் நாடு, நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரஷ்யா போர் தொடுத்தது.

உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ரஷ்யா போர் நிறுத்தம் செய்யவில்லை. இரு ஆண்டுகள் தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது. இதில்  இரண்டு தரப்பிலும், பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளானர்.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார உதவி மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

இதனால், உக்ரைன் தொடர்ந்து ரஸ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன்  மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால், அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ், அமெரிக்கா கொடுத்தச  ஏவுகணையை  பயன்படுத்த நினைக்கிறது. இதை தற்காப்பாக ஏற்க முடியாது. போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்த இது அடிப்படை காரணமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments