குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகால புதுமை!!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (10:38 IST)
அமெரி எனும் பனியடுக்குப் பாறையில் இருந்து புதிதாக பனிப்பாறை ஒன்று பிறந்திருப்பதி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், அண்டார்டிக்காவில் உள்ள அமெரி பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிறந்துள்ளது. பனிப்பாறை குட்டி போடுமா என வியக்க வேண்டாம். இது குறித்த முழு விவரம் இதோ... 
 
பனியடுக்கின் மேற்பகுதிகளில் அடுத்தடுத்து பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் அளவு பெருக்கும் போது அதன் கீழ்ப் பகுதியில் ஒரு பெரும் பாறை பிரிந்து சென்று பெருங்கடலில் சேரும் நிகழ்வே பனியடுக்குப் பாறை குட்டி போடுதல் அல்லது ஆங்கிலத்தில் கால்விங் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இந்த முறையில்தான் அமெரி பனியடுக்குப் பாறையில் இருந்து புதிய பனிப்பாறை பிறந்துள்ளது. இதில் அதிசயம் என்னெவெனில் அமெரி 1960-களுக்குப் பிறகு பிரிந்து உரிவாகிய பாறைகளில் இது மிகப்பெரியது. 
 
அன்டார்டிக்காவில் உள்ள மூன்றாவது பெரிய பனி அடுக்குப் பாறை அமெரி ஆகும். தற்போது இதன் குட்டிக்கு டி28 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments