Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை கூட இல்லை.. மர்ம காய்ச்சலில் சிக்கிய வடகொரியா!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (15:15 IST)
வடகொரியாவில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 14.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளில் பல நாடுகளிலும் பரவி ஏராளமான மக்களை பலி கொண்டது. ஆனால் அந்த சமயத்திலும் வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகாமல் இருந்து வந்தது உலக நாடுகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்புகள் உறுதியாக தொடங்கியுள்ளன. அங்கு ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் நாட்டிற்கே முழு முடக்கம் அறிவித்தார் கிம் ஜாங் அன்.

ஆனால் தற்சமயம் பல வடகொரிய மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை அறிய கூட வடகொரியாவில் போதுமான கொரோனா பரிசோதனை கருவிகள் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் தடுப்பூசிகள், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவையும் வடகொரியாவில் தேவையான அளவு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியாவில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.8 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கொரோனாவாக இருக்கும் பட்சத்தில் உலக நாடுகளுக்கும் விளைவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments