Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல.. புல்வெளியில் பாய்ந்த விமானம்! – பிலிப்பைன்சில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (12:47 IST)
தென்கொரியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் வந்த விமானம் மோசமான வானிலையால் புல்வெளியில் பாய்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் இன்சியான் நகர விமான நிலையத்திலிருந்து கொரியன் ஏர் விமானம் ஒன்று 173 பேருடன் பிலிப்பைன்சின் மெக்டன் செபு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. விமானம் பிலிப்பைன்சில் நுழைந்தது முதலே மழை காரணமாக மோசமான வானிலை நிலவியுள்ளது.

இதனால் விமானத்தை பிலிப்பைன்சின் லபு லபு நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு முறை விமானத்தை தரையிறக்க விமானி விமான நிலையத்தை நெருங்கியும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ALSO READ: வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர் திமுக குலைத்துள்ளது: ஓபிஎஸ்

இதனால் வட்டமடித்து திரும்பிய விமானம் மூன்றாவது முறையாக தரையில் இறங்கியது. ஆனால் ஓடுதளம் மழை காரணமாக தண்ணீராக இருந்ததால் பாதை மாறி விமானத்தின் புல்வெளி பாதையில் பாய்ந்தது விமானம். இதனால் தரையிரங்கும் சக்கரங்கள் உடைந்து விமானத்தின் முன்பாகம் தரையோடு மோதியது.

உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதை தவிர உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments