எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல.. புல்வெளியில் பாய்ந்த விமானம்! – பிலிப்பைன்சில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (12:47 IST)
தென்கொரியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் வந்த விமானம் மோசமான வானிலையால் புல்வெளியில் பாய்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் இன்சியான் நகர விமான நிலையத்திலிருந்து கொரியன் ஏர் விமானம் ஒன்று 173 பேருடன் பிலிப்பைன்சின் மெக்டன் செபு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. விமானம் பிலிப்பைன்சில் நுழைந்தது முதலே மழை காரணமாக மோசமான வானிலை நிலவியுள்ளது.

இதனால் விமானத்தை பிலிப்பைன்சின் லபு லபு நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு முறை விமானத்தை தரையிறக்க விமானி விமான நிலையத்தை நெருங்கியும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ALSO READ: வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர் திமுக குலைத்துள்ளது: ஓபிஎஸ்

இதனால் வட்டமடித்து திரும்பிய விமானம் மூன்றாவது முறையாக தரையில் இறங்கியது. ஆனால் ஓடுதளம் மழை காரணமாக தண்ணீராக இருந்ததால் பாதை மாறி விமானத்தின் புல்வெளி பாதையில் பாய்ந்தது விமானம். இதனால் தரையிரங்கும் சக்கரங்கள் உடைந்து விமானத்தின் முன்பாகம் தரையோடு மோதியது.

உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதை தவிர உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments