Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒழுங்கா சொல்லுங்க இது யார் குழந்த? – பயணிகளை சோதனை போட்ட கத்தார்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (10:13 IST)
கத்தார் விமான நிலையத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை யாருடையது என கண்டறிய பயணிகளை கத்தார் அரசு பரிசோதனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் ரகசிய காதல், முறையற்ற பாலியல் உறவுகள், கருத்தரித்தல் உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனால் முறையற்ற ரீதியில் குழந்தை பெறுவோர் அதை எங்காவது தூக்கி வீசிவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் கத்தார் விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா புறப்பட இருந்த விமானத்தின் பயணிகள் காத்திருப்பு பகுதி கழிவறையில் பிறந்த குழந்தை ஒன்று பிளாஸ்டிக் பையால் மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ஆஸ்திரேலிய விமானத்தை நிறுத்திய அதிகாரிகள் அதிலிருந்த பெண்களில் யாருடைய குழந்தை இது என கண்டறிய அவர்களை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி வைரலான நிலையில் சமூக ஆர்வலர்கள் பலர் கத்தார் அரசின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து கத்தார் அரசு தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்