Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதித்துறை அமைச்சரான சர்ச்சை நீதிபதி

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (21:30 IST)
பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற தீவிர வலதுசாரி வேட்பாளரான சயீர் பொல்சனாரூ, ஊழலுக்கு எதிரானவராக அறியப்படும் நீதிபதி செர்ஜியோ மொரொவை நீதித்துறை அமைச்சராக நியமித்துள்ளார்.
தன்னை நீதித்துறை அமைச்சராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டது தனக்கு கிடைத்த "கௌரவம்" என்று மொரொ தெரிவித்தார்.
 
ஆனால் இந்த நியமனத்தின் மூலம், மோசடிக் குற்றச்சாட்டுக்கு எதிரான அவரது உயர்மட்ட விசாரணை, அரசியல் நோக்கத்தோடு செய்யப்பட்டது என்று குற்றச்சாட்டு வலுவாக எழுப்பப்படலாம்.
 
ஆபரேஷன் கார்வாஷ் என்று அறியப்படும் அவரது விசாரணை நியாயமற்ற முறையில் இடதுசாரி அரசியல் வாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டு உண்டு.
 
இந்த விசாரணையில் உருண்ட ஒரு முக்கியமான தலை இடதுசாரித் தலைவரான முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா.
நடந்து முடிந்த தேர்தலில் லூலா முன்னணி போட்டியாளராக இருந்தார். அந்த நேரத்தில்தான் ஊழல் வழக்கில் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
பிரிவினைவாத, வலதுசாரிக் கருத்துகளை உடையவரான போல்சனரூ கடந்த வாரம் நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்.
 
கடந்த காலத்தின் சர்வாதிகார ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசிய அவர், பெண்கள், கருப்பினத்தவர், ஒருபால் உறவினர் ஆகியோர் மீது கூறிய கருத்துகள் சர்ச்சையையும், கவலையையும் ஏற்படுத்தின.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments