Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் திரும்ப பெறப்படும்! – ஜோ பிடன் முடிவு!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:30 IST)
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ படைகள் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ள நிலையில் அவர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2001 ஆண்டில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா அமைப்பு நடத்திய தாக்குதளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவளித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இறங்கிய அமெரிக்க ராணுவம் அங்கு தலீபான்களை ஒடுக்கி ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்டது. மேலும் 2011ம் ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்க படைகள் மெல்ல திரும்ப பெறப்பட்டன.

அதை தொடர்ந்து தலிபான்கள் அமைப்பு அடிக்கடி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் தொடர்ந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு 2018ம் ஆண்டு அமெரிக்கா தலீபான்களுடன் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது.

அதன்படி தலீபான்கள் அமெரிக்கா மற்றும் தோழமை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளிக்கும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்படும். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்க படைகளை முழுவதுமாக திரும்ப பெற நடப்பு அதிபர் ஜோ பிடன் முடிவெடுத்துள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெள்ளை மாளிகை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments