Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சத்தை கடந்த அமெரிக்க கொரோனா பலிகள்! – அதிபர் ஜோ பிடன் வருத்தம்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (13:17 IST)
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாய் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்த ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள நடப்பு அதிபர் ஜோ பிடன், முந்தைய ட்ரம்ப் ஆட்சி காலத்தில் கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியதோடு, எதிர் வரும் காலத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மக்கள் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments