Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனை சுற்றி வளைக்கும் ரஷ்யா; அமெரிக்கர்கள் வெளியேற ஜோ பைடன் உத்தரவு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:49 IST)
உக்ரைனை ரஷ்யாவின் ராணுவம் சுற்றி வளைக்கும் நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரக பணியாளர்களை உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

சோவியத் யூனியன் சிதறியபோது தனி நாடாக உருவானது உக்ரைன். உக்ரைனில் கடந்த 2013 வரை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட அதனால் அவர் தப்பித்து ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் நடந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் போரினால் உக்ரைனின் டோனஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசமானது.

அதை தொடர்ந்து உக்ரைனை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ஆதரவு அரசை அமைக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments