Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைபிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை; ஜப்பான் நிறுவனம் அதிரடி

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (16:55 IST)
வேலை நேரத்தில் புகைபிடிக்கச் செல்லாத ஊழியர்களுக்கு ஜப்பான் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது.


 

 
ஜப்பான் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பியாலா இன்க் நிறுவனத்தின் ஆலோசனை பெட்டியில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது புகைபிடிக்கும் ஊழியர்களை விட புகைபிடிக்காதவர்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். எனவே அவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பியாலா இன்க் நிறுவனத்தின் மூத்த தலைவர் தாகோ ஆசுகாவும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர். இதனால் புகைப்பிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதல் நன்மைகள் அளிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி வேலை நேரத்தில் புகைப்பிடிக்காமல் அதிக உற்பத்தி அளிக்கும் ஊழியர்களுக்குப் பரிசுகள் அளிப்பதைவிட கூடுதல் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளார்.
 
இந்த விதிமுறை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பின்பற்ற துவங்கியுள்ளனர். புகைபிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments